மருத்துவமனையில் அனுமதி

கொரோனா வைரஸ் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று 1200க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்திலும், 1000க்கும் மேற்பட்டவர்கள் சென்னையிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல திமுக எம்.எல்.ஏ ஒருவரையும் கொரோனா தொற்று பாதித்துள்ளது., ஆம், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு கடந்த சில நாட்களாக கொரனோ தொற்று அறிகுறி இருந்ததாகவும், இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் அவர்கள் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply