கனமழை எதிரொலி: கன்னியாகுமரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் மழையால் கன்னியாகுமரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.