shadow

கேரள முதல்வர் போட்டியில் இருந்து திடீர் விலகலா? பெரும் பரபரப்பு

umman chandyதமிழகத்தை போல கேரளாவிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் கோஷ்டி மோதல் முற்றி வருவதால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான உம்மன்சாண்டி போட்டியில் இருந்து விலகவிருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் கேரள காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்ய டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுதீரன் என்பவர், தொடர்ந்து மூத்த தலைவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு கொடுத்து வருவதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், எனவே இம்முறை மூத்த தலைவர்களுக்கு சீட் கொடுக்க கூடாது என்றும் போர்க்கொடி தூக்கி வருகிறார்.

சுதீரனின் கருத்து தன்னையும் தனது ஆதரவாளர்களையும் குறிவைத்த கூறிய கருத்து என்பதை புரிந்து கொண்ட முதல்வர் உம்மன்சாண்டி,  சுதீரன் விருப்பப்படி, வேட்பாளர்கள் மாற்றப்பட்டால், தனக்கும் அந்த விதிமுறை பொருந்தும் என்றும் எனவே நானும் போட்டியிலிருந்து விலகி விடுவேன் என்றும் மாநில மற்றும் தேசிய தலைமைக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்,. இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் உம்மன்சாண்டியை மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply