shadow

பட்டேல் பிறந்த நாளை மறந்தது ஏன்? காங்கிரசுக்கு பாஜக கேள்வி

patelநேற்று நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதோடு, சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தியின் நினைவு நாளை மட்டும் அனுஷ்டித்ததாகவும், சர்தார் வல்லபாய் பட்டேலை அவர்கள் மறந்துவிட்டதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது “காங்கிரஸ் கட்சி காந்தியின் குடும்பத்தை மட்டும் தான் நினைவில் வைத்துக் கொள்ளும். சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் பிறந்த, இறந்த நாட்களை மறந்துவிடும் என்று குற்றஞ்சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்ததோடு, பாஜக, இந்திராவின் நினைவு நாளை அனுசரிக்கவில்லை என்றும் பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளது.

Leave a Reply