shadow

உண்ணாவிரதத்திற்கு முன் ஒரு கட்டு கட்டிய காங்கிரஸார்

தமிழகத்தில் சமீபத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தபோது மதிய உணவு இடைவெளி இடப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி நடத்திய உண்ணாவிரதத்திலும் கூத்து நடந்துள்ளது.

டெல்லியில் உண்ணாவிரதத்துக்கு முன் காங்கிரசார் சாப்பிடும் புகைப்படங்களை பா.ஜனதா தலைவர் ஹரிஷ் குரானா தனது டுவிட்டரில் வெளியிட்டு காங்கிரஸ் கட்சியினர்களை கலாய்த்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. டெல்லி ராஜ்காட்டில் நடந்த உண்ணாவிரதத்தில் ராகுல் காந்தி மற்றும் மாநில தலைவர் அஜய் மக்கான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன் அஜய் மக்கான், லவ்லி உள்ளிட்ட டெல்லி மாநில தலைவர்கள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிடும் புகைப்படங்களை பா.ஜனதா தலைவர் ஹரிஷ் குரானா தனது டுவிட்டரில் வெளியிட்டு காங்கிரசாரை கிண்டல் செய்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது: வாவ்… நமது காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு மக்களை அழைத்துவிட்டு, அவர்கள் மட்டும் உணவகத்தில் சாப்பிட்டு இருக்கின்றனர். இதன் மூலம் மக்களை அவர்கள் முட்டாளாக்கி விட்டனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply