shadow

cash-china-_vbc6

சீனாவை சேர்ந்த ஒரு நிறுவன உரிமையாளர் ஊழியர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகிவிடுவார் என்ற வதந்தி கிளம்பியதால், அந்த வதந்தியை பொய்யாக்க அவர் பணத்தினால் சுவர் கட்டி அதன் நடுவில் நின்று தனது பொருளாதார நிலையை நிரூபித்துள்ளார்.

சீனாவை சேர்ந்த 45 வயதான தொழிலதிபர் செங் ஹிசாயோ என்பவர் பண நெருக்கடியில் இருப்பதாக புரளி கிளம்பியது. இதனால் அவருடைய ஊழியர்களும், பிசினஸ் பார்ட்னர்களும் அதிர்ச்சி அடைந்தனர். செங் ஹிசயோ விரைவில் இருக்கும் பணத்தை சுருட்டிவிட்டு தலைமறைவாகிவிடுவார் என்று கூறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தன்னிடம் உள்ள மில்லியன் கணக்கான டாலர்களை அலுவலகத்திற்கு கொண்டு வந்த பணக்கட்டுகளால் சுவர் போன்று ஏற்படுத்தினார்.

இதன்மூலம் அவர் பண நெருக்கடியில் இல்லை என்பதை தனது ஊழியர்களுக்கும் பிசினஸ் பார்ட்னர்களுக்கும் நிரூபித்ததோடு அனைவருக்கும் பணத்தை உடனடியாக செட்டில்மெண்ட் செய்தாராம். தொழிலதிபர் கட்டிய பணச்சுவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. china-cash-_vbc9 money-china-_vbc4 PAY-Money-walls

Leave a Reply