எம்ஜிஆர் பல்கலையின் ஆய்வு

சென்னையில் கொரோனா வைரஸால் தற்போது 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவின்படி சென்னையில் கொரோனா வைரஸ் அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி தமிழகத்தின் கொரனோ வைரஸ் பாதிப்பு அடுத்த மாதம் 2.7 லட்சமாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60% சென்னையை சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு மற்றும் மாஸ்க் அணிவதால் கொரோனாவின் உச்சநிலையின் வேகத்தை குறைக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply