கர்நாடகத்தை கண்டித்து 16வது தேதி தமிழகத்தில் முழு அடைப்பு
கர்நாடகாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ‘நாம் தமிழர்’ சீமான் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு கொடுத்துள்ளதால் 16ஆம் தேதி முழு அடைப்பு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முழு அடைப்பில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவு அளித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர்ம் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த முழு அடைப்பு குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் செய்யாததால் அன்றைய தினம் வழக்கம்போல் பேருந்துகள் ஓடும் என்றே தெரிகிறது.
காவிரி பிரச்சனை காரணமாக அப்பாவி தமிழர்கள் பெங்களூரில் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.