shadow

aarthi

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் மதவாத கட்சியோடு இணைந்து மதுவாத கட்சியும், சாதிவாத கட்சியும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அந்த கட்சிகளை பொதுமக்கள் ஒதுக்கிவிட்டு, அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என நகைச்சுவை நடிகை ஆர்த்தி பேசியுள்ளார்.

நேற்று திருவள்ளூர் அதிமுக வெட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து வாக்குகள் சேகரித்த நடிகை ஆர்த்தி, “பாரதிய ஜனதா என்ற மதவாத கட்சியுடன் தேமுதிக என்ற மதுவாத கட்சி இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் சாதிவாத கட்சியான பாமகவில் இணைந்து, இது ஒரு கொள்கையற்ற கூட்டணி என்பதை நிரூபிக்கின்றது. கருப்பு துண்டு போட்டு நாத்திகம் பேசும் மதிமுக, காவியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. கொள்கையளவில் ஒற்றுமையில்லாத இந்த கூட்டணியால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்.

செம்மண் முதல் ஸ்பெக்ட்ரம் வரை ஊழல் செய்த கட்சிகளை இந்த தேர்தலில் வாக்காளர்கள் விரட்ட வேண்டும். இவர்களால இலங்கை தமிழர்கள் அழிந்ததுபோல தமிழக தமிழர்களும் அழியும் நிலைக்கு வந்துவிடக்கூடாது.

இந்தியாவை ராணுவம் மட்டும்தான் காப்பாற்ற வேண்டும் என்பதில்லை. இந்தியாவை அதிமுகவும் காப்பாற்றும். இரட்டை இலை மலர்ந்தால் மட்டும் இந்திய மக்களின் வாழ்வு மலர்வதோடு, தமிழ் ஈழமும் மலரும். எனவே தமிழக மக்கள் அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்கவேண்டும்.

இவ்வாறு நடிகை ஆர்த்தி பேசினார்.

Leave a Reply