அதிரடி அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை செப்டம்பர் மாத கடைசியில் நடத்த வேண்டும் என்று யூஜிசி என்ற பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது

இந்த தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன், முறையிலும் தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை சுகாதாரத்துறையின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு உறுதி என்ற தகவல் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply