கடந்த ஐந்தாறு வருடங்களாக தமிழ் சினிமாவை பிடித்த பேய் இன்னும் விட்டபாடில்லை. காஞ்சனா, அரண்மனை, டிமாண்ட்டி காலனி, டார்லிங் என தொடர்ச்சியாக பேய்ப்படங்கள் வெற்றி பெற்று வருவதால், பேய்க்கதைகளை நோக்கி இயக்குனர்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர்களை மட்டுமின்றி நடிகைகளையும் பேய்க்கதை கவர்ந்துள்ளது. நயன்தாரா நடித்து வரும் மாயா, த்ரிஷா மற்றும் ஹன்சிகா நடித்து வரும் ‘அரண்மனை 2’ வரிசையில் தற்போது லட்சுமி மேனனும் இணைந்துள்ளார்.
நாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ள புதிய பேய்ப்படம் ஒன்றில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாகவும் பேயாகவும் நடிக்க லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஊட்டியில் தொடங்கவுள்ளது. சமீபத்தில் லட்சுமிமேனன் கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்பிடிப்பில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.