shadow

கல்லால் அடித்து கைதி படுகொலை: கோவை சிறையில் நடந்த கொடூரம்

கோவை சிறையில் இருந்த கைதி ஒருவர் சக கைதிகளால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கும் மற்றொரு கைதியான விஜய் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், இருவருக்கும் கைக்கலப்பு ஏற்பட்டது.

இந்த மோதலில் விஜய் கல்லால் தாக்கியதில் ரமேஷ் படுகாயமடைந்தார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply