துவரம்பருப்பு 200 கிராம்
துருவிய தேங்காய் 100 கிராம்
வற்றல் மிளகாய் 10
வெங்காயம் 150 கிராம்
புளி 40 கிராம்
சாம்பார்ப் பொடி 4 தேக்கரண்டி
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
தக்காளி 100 கிராம்
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயம் 3 சிட்டிகை
தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள்
செய்முறை:
துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். புளியை நீர் விட்டுக் கரைத்து அதனுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வற்றல் மிளகாய் போடவும். கடுகு வெடித்ததும், வெந்தயம் போட்டு வதக்கவும். வெந்தயம் சிவந்ததும் உரித்த வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
பின்பு அதனுடன் புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். வேக வைத்த பருப்பை சாம்பார்த் தூள், தேங்காயுடன் போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அதை இறக்கி வைத்து பரிமாறவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.