shadow

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து மழை மற்றும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இன்று செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் சில உத்தரவுகளை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.