shadow

கர்நாடகாவில் எடியூரப்பா அளித்த விவசாய கடன் தள்ளுபடி ஆகுமா?

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து இன்னும் 15 நாள்களில் நல்ல முடிவு வெளியாகும் என்று கா்நாடகா முதல்வா் குமாரசாமி கூறியுள்ளார். .

மஜத கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் குமாரசாமி பிரசாரத்தின் போது உறுதி அளித்தார். இதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தற்போது மஜத கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் குமாரசாமி, தான் பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளாஅர்.. இதற்காக அவா் விடுத்த முழு அடைப்பு போராட்டம் எதிர்பார்த்த அளவிற்கு பலன் அளிக்கவில்லை. இன்று அம்மாநில முதல்வா் குமாரசாமி அம்மாநில விவசாய சங்க தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் அவர் பேசுகையில், விவசாய கடனை இந்த அரசு கண்டிப்பாக தள்ளுபடி செய்யும். இதற்காக விவசாயிகள் 15 நாள்கள் பொறுமை காக்க வேண்டும். 15 நாள்களில் நல்ல முடிவு வெளியாகும். எந்தவிதமான இடா்பாடுகள் இருந்தாலும் நிதிக்கட்டுப்பாட்டை பராமரிப்பதிலும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதிலும் அரசு உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply