shadow

modi1இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியை வரும் ஜூன் 3ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்திக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3-ம் தேதி புது டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுவார்.

பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் சார்பில் மனு ஒன்றை பிரதமரிடம் அவர் அளிப்பார். அதில், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் மிக முக்கிய விவகாரங்கள் இந்த மனுவில் அடங்கியிருக்கும்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை துரிதமாக்குவதற்கு வித்திடக் கூடியதும், மாநில நலனைக் காக்கக் கூடியதுமான மத்திய அரசு அதிவேகமாக கவனம் செலுத்தக்கூடிய விவகாரங்கள் முன்வைக்கப்படும்” கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியுடன் காவிரி நதிநீர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை ஆகிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.

Leave a Reply