shadow

9 சோற்றானிக்கரை ‎பகவதி கோவில், கேரளத்தில் மிகவும் பெயர் பெற்ற இந்து ‎மதத்தினர் போற்றும் அன்னை இறைவியான பகவதி கோவில் ‎ஆகும். இந்தக் கோவில் தென்னிந்தியாவில் கேரள ‎மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் என்ற இடத்தின் ‎அருகிலுள்ளது. இக்கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலைப் ‎போலவே மிகவும் பெயர் பெற்ற கோவிலாகும். இந்த இடத்தில் ‎பகவதி வழிபாடு மிகவும் பிரபலமானதாகும்,

மேலும் அன்னை ‎பகவதியை இறைவன் திருமாலுடன் இந்தக் கோவிலில் ‎பக்தர்கள் வழிபடுகின்றனர், மேலும் அன்னை பகவதி ஒவ்வொரு ‎நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: ‎காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ‎ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; நண்பகலில் சௌபாக்கியம் ‎தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; ‎மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல ‎வண்ண உடையிலும், காட்சி தந்து பக்தர்களை உய்வித்து அருள்பாலித்து வருகிறாள். ‎ பக்தர்கள் மனம் சார்ந்த கோளாறுகள் கொண்ட தமது ‎உறவினர்கள் மற்றும் சார்ந்தோரை, அன்னை பகவதியின் ‎அருளால், குணப்படுத்தும் நோக்குடன் இங்கு வருகை தந்து ‎அன்னையை வழிபடுகின்றனர்.

சோற்றானிக்கரை கோவிலின் ‘கீழ்க்காவில்’ நடைபெறும் ‎பூசைகளில் ஒன்றான ‘குருதி பூசை’யில் மக்கள் ஆர்வத்துடன் ‎கலந்துகொண்டு, அன்னை பகவதியின் அருளைப் பெறுகின்றனர். ‎இந்தப் பூசை மாலை வேளைகளில் அன்னையின் அருளைப் ‎பெறுவதற்காக நடத்தப்படுகிறது. முன்பெல்லாம் ‘குருதி பூசை’ வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ‎நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போதெல்லாம், இந்தப் பூசை ‎ஒவ்வொரு நாளும் நடத்தப்படுகிறது.‎ ஆண்டுதோறும் இந்தக்கோவிலில் நடைபெறும் மிகவும் ‎முக்கியமான விழா ‘சோற்றானிக்கரை மகம்’ என்ற பெயரில் ‎வழங்கப்படும் திருவிழா ஆகும். ‎ சோற்றானிக்கரை கோவிலுக்கு செல்லும் வழியில் ‎த்ரிப்புணித்துறா என்ற இடத்தில் பூர்ணத்ரயீசர் கோவிலும் ‎குடிகொண்டுள்ளது. சோற்றானிக்கரை பகவதி கோவிலில் இருந்து சுமார் ‎‎9 கிலோமீட்டர் தொலைவில் த்ரிப்புணித்துறாவில் உள்ள ‎பூர்ணத்ரயீசர் கோவில் குடிகொண்டுள்ளது.‎

9abவாயு மார்கமாக: சர்வதேச விமான தளம் எர்ணாகுளம், ‎கொச்சியில் இருந்து ஆலுவாவில் உள்ள நெடும்பச்சேரியில், சுமார் ‎‎22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ‎ தொடருந்து பயணம்: சோற்றானிக்கரைக்கு மிகவும் அருகிலுள்ள எர்ணாகுளத்தில் பயணிகள் இறங்கவேண்டும், ‎எர்ணாகுளம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ‎கொச்சியில் இரு இரயில் நிலையங்கள் உள்ளன, அவை ‎எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் நகரம் ஆகும். ‎வடக்கு மற்றும் தென்னிந்தியாவில் இருந்துவரும் இரயில்கள் ‎எர்ணாகுளம் சந்திப்பில் நிற்கும். எர்ணாகுளம் டவுன், வடக்கு பாலம் அருகில்,

‎பேருந்து நிலையம்: கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் சென்றால் பேருந்து நிலையம், எர்ணாகுளம் ‎சந்திப்பின் ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ளது. ‎அந்நிறுவனம் கேரள மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய ‎நகரங்களுக்கும் விரைவு மற்றும் மிக விரைவு பேருந்துகளை ‎இயக்கி வருகிறது மேலும் அருகாமையில் உள்ள ‎மாநிலங்களுக்கும் பேருந்துசேவைகள் வழங்கப்படுகின்றன. அதே ‎போன்று இதர மாநிலங்கள் வழங்கும் பேருந்துசேவைகளும் ‎கிடைக்கப் பெறுகின்றன. மேலும் தனியார் துறையும் சோடை ‎போகாமல் எர்ணாகுளத்தில் இருந்து பல நகரங்களுக்கு ‎செல்வதற்கான பேருந்து சேவைகளை நல்கி வருகின்றது. அவை ‎ஹை கோர்ட் ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் காலூர் ‎ஜங்ஷன் போன்ற இடங்களிலிருந்து இயக்கப் படுகின்றன.

Leave a Reply