சீனா: ரன்வேயில் நின்று விமானத்தை நிறுத்த கைகாட்டிய பெண் கைது
நம்மூரில் பஸ் நிற்கவில்லை என்றால் பொறுமை இழந்து நடுரோட்டில் நின்று பஸ்ஸை நிறுத்துமாறு கைகாட்டுவோம் அல்லவா, அதுபோன்று ஒரு பெண்மணி விமானத்தை நிறுத்தியுள்ளார். சீனாவில் நடந்த இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள விமான நிலையத்திற்கு ஒரு தம்பதியினர் விமானத்தில் செல்ல தாமதமாக வந்தனர். ஆனால் அந்த தம்பதிகளை செக்யூரிட்டி அனுமதிக்கவில்லை. ஆனால் மிக அவசரமாக தாங்கள் அந்த விமானத்தில் போயே ஆகவேண்டும் என்று அந்த தம்பதியினர் அடம்பிடித்தனர்.
இந்நிலையில் திடீரென செக்யூரிட்டிகளை மீறி விறுவிறுவென ரன்வேயை நோக்கி ஓடிய அந்த பெண், விமான ஓடுதளத்தில் நின்று கொண்டு விமானத்தை நிற்குமாறு கைகாட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணையும் அவருடைய கணவரையும் கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.