இது ரொம்ப ஓவர்டா: வெளிநாட்டவர் வருவதற்கு தடை விதித்த சீனா!

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சீனா படிப்படியாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது

கொரோனா பிறப்பிடம் என்று கூறப்படும் வூகான் மாகாணத்தில் தற்போது போக்குவரத்தும் தொடங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்

இந்த நிலையில் உலகம் முழுவதும் மிக மோசமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்பி விட்டு தற்போது வெளிநாட்டவர்கள் சீனாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் கிண்டலுடன் கூடிய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply