shadow

தற்கொலை படையில் 7 வயது சிறுவன். ஐ.எஸ் இயக்கத்தின் கொடூர முயற்சி முறியடிப்பு

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பெரும்பகுதி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நாடுகளில் குழந்தைகளை தற்கொலை படையாக தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையி ஈராக்கில் உள்ள முக்கிய தெரு ஒன்றில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்த ஒரு 7 வயது சிறுவனை ராணுவ வீரர்கள் சோதனை செய்தபோது அவனுடைய உடலில் வெடிகுண்டு இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனது உடலில் என்ன இருக்கின்றது என்றே தெரியாத அந்த சிறுவனிடம் ராணுவ வீரர் ஒருவர் பயப்பட வேண்டாம் என ஆறுதல் வார்த்தை கூறி மெல்ல மெல்ல அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்தார். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply