3 மாதம் நீட்டிப்பு!
தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் ஜூலை மாத இறுதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் அவர் வரும் அக்டோபர் மாதம் வரை அவர் தலைமை செயலாளராக நீடிப்பார்
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா ஓய்வு பெற்றவுடன் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் புதிய தலைமை செயலாளராக பதவியேற்று கொண்டார்.
இவரது பதவிக்காலம் ஜூலையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் கடந்த1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். முடித்தார். அதன்பின் 1985ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட உதவி ஆட்சியராகவும், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.