அப்துல் கலாம் ஆத்மா சாந்தி அடைய, சிதம்பரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஆத்மா சாந்தியடைய பொது தீட்சிதர்களால், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மோட்ச தீபம் செவ்வாயன்று ஏற்றப்பட்டது. நடராஜர் சன்னதியில் நெய் தீபமும், நான்கு கோபுரங்களில் மோட்ச தீபமும் ஏற்றப்பட்டன.அது போல, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், தமிழ்நாடு பிராமண இளைஞர்கள் மத நல்லிணக்கப் பேரவை சார்பில், அப்துல் கலாம் ஆத்மா சாந்தி அடைய, மோட்ச தீப வேதவேள்வி நடத்தப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.