shadow

சிதம்பரம்:

நடராஜர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம், நேற்று நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா மகா தரிசனம் உற்சவம், கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், திருத்தேரோட்டம் நடந்தது. நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்மன் தேரில் இருந்து இறங்கி, ஆனந்த நடனமாடி ராஜசபை ஆயிரங்கால் மண்டப முகப்பில் இரவு, 8:30 மணிக்கு எழுந்தருளினார்.

chitambaram-natarajar-aruthrau-darsan

ராஜசபையில் பொது தீட்சிதர்கள் சார்பில், லட்சார்ச்சனை நடந்தது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கிய சிறப்பு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காலை, 8:00 மணி வரை நடந்தது. பின், சுவாமி ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் அருள்பாலித்தார். 11:00 மணிக்கு தீட்சிதர்கள் சிற்சபையில், ரகசிய பூஜைகள் நடந்தன. மதியம் 12:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மதியம், 1:30 மணிக்கு தீர்த்தவாரியும், 2:45 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ராஜ சபையில் இருந்து ஆனந்த நடனம் ஆடியவாறு தில்லையம்பலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆருத்ரா மகா தரிசனம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ’தில்லைக் கூத்தனே, பொன்னம்பலத்தானே, ஆடல் வல்லானே’ என, கோஷமிட்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என, 1,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Leave a Reply