shadow

awareness இன்று காலை முதல் சென்னை நகர் முழுவதும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி இளைஞர்கள் அமைப்பு ஒன்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

சென்னையில் வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி சென்னை நகரம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டவேண்டும் என்று இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தோழன் என்கிற இளைஞர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

தோழன் அமைப்பினர் விபத்துக்களை தடுப்பது எப்படி போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நடு ரோட்டில் நின்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின்போது அவர்கள் விபத்து இல்லாமல் எப்படி பயணம் செய்வது என்பது குறித்த துண்டுப்பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்.

awareness1

Leave a Reply