சென்னை தங்கச்சாலை பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்த கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தங்கசாலை மணிகூண்டு அருகில் ஒரு மேம்பாலமும், பொதுமக்களின் வசதி கருதி ஸ்டான்லி மருத்துவமனை–மணியக் காரச் சத்திர தெருவில் ஒரு சுரங்கப்பாதையும் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இந்த பணி முடிவடைந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை காலை 9.00 மணியளவில் திமுக சார்பில் தங்கச்சாலை மணிகூண்டு மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த தகவலை வடசென்னை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் தலைமை ஏற்பார் என்றும், வடசென்னை திமுகவினர் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டன குரலை எழுப்ப வேண்டும் என்றும் ஆர்.டி.சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.