shadow

iplசென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியை கடைசி பந்தில் வெற்றி பெற்று த்ரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டுமினி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் அவுட் ஆகியதால் சென்னை அணி பின்னடைவு ஏற்பட்டது., இருப்பினும் ஸ்மித், டீ பிளஸ்ஸிஸ், தோனி ஆகியோர் ஓரளவுக்கு அடித்து ஆடி நிர்ணயிக்கப்பட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற 151 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணியில் மோர்க்கல் மட்டுமே சிறப்பாக விளையாடி 73 ரன்களை குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகியதால் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

டுவைன் பிராவோ கடைசி ஓவரை பந்து வீச முதல் பந்தில் பவுண்டரி அடித்த மோர்கெல், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் மூன்றாவது பந்தில் இம்ரான் தாஹிர் ஆட்டமிழந்தார். நான்காவது பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார் மோர்கெல் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் வெற்றி பெற ஆறு ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது.

கடைசி பந்தை மோர்க்கல் தனது முழு சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி “லாங் ஆஃப்’ திசையில் பந்தைத் தூக்கி அடித்தார். ஆனால் பந்து பவுண்டரிக்கு மட்டுமே சென்ற சென்றதால் சென்னை 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Leave a Reply