shadow

தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே: ஸ்ரீனிவாசன் நம்பிக்கை

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் கேப்டன் தோனியும் ஒரு காரணமாக இருந்துள்ளார். பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் ஆட்டத்தின் போக்கை திடீரென மாற்றும் திறன் உடையவர் தோனி என்பதால் அவருக்கு ஐபிஎல் ரசிகர்கள் அதிகம்

இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் தடை முடிந்தாலும், இதுவரையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை.

இந்நிலையில், அதன் உரிமையாளரும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன், சென்னையில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ‘’2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்,’’ என்றார். மேலும், ‘’இந்த அணிக்கு, தோனியே கேப்டனாக இருப்பார்; அசுர பலத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடப் போவதை யாராலும் தடுக்க முடியாது,’’ என்றும் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

Leave a Reply