நேற்று முன் தின சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை மிக அபாரமான வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இன்று அதே சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது.
முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மெக்கல்லம் மிக அபாரமாக பேட்டிங் செய்து சதமடித்தார். அவருக்கு கேப்டன் தோனி நல்ல கம்பெனி கொடுத்ததோடு 53 ரன்களை தனது அதிரடி பேட்டிங் மூலம் எடுத்தார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 209 ரன்கள் குவித்தது.
வெற்றி பெற 210 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கத்தில் இருந்தே நிதானமாகவே விளையாடியது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வார்னர் 53 ரன்களும், தவான் 263 ரன்களும், வில்லியம்ஸன் 26 ரன்களும், எடுத்தனர்.
அபாரமாக சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சென்னை அணியின் மெக்கல்லம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.