shadow

சென்னை சில்க்ஸ் தீ விபத்திற்கு காரணம் என்ன? புதிய தகவல்

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடையில் இன்று காலை 4.45 மணி முதல் தொடர்ந்து தீ எரிந்து வருகிறது. சுமார் 50 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்துதான் தீவிபத்து உண்டாகியுள்ளதாம். ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட மின்கசிவால் தீ உண்டாகியதாகவும், அந்த அறையில் இருந்த டீசல் கேனில் தீப்பற்றி வெடித்ததால் தீ வேகமாக பரவியதும் தெரிய வந்திருக்கிறது.

இதனிடையே, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், விபத்து ஏற்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க வேண்டாம் என்றும் வேடிக்கை பார்க்க யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனும் தீ விபத்து நேர்ந்த இடத்தில் ஆய்வு

Leave a Reply