சிலம்பம் போட்டியில் மெடல்களை குவித்த சென்னை அணி:

தென்னிந்திய சிலம்பம் அகாடமி, தமிழக அளவில் 2019ஆம் ஆண்டின் சிலம்பம் போட்டிகளை சமீபத்தில் நடத்தியது. இந்த அகாடமியின் செயலாளர் ஜவஹர் மற்றும் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அதில் சென்னையை சேர்ந்த ஃபைவ் எலமண்ட்ஸ் சிலம்பம் மற்றும் ஆர்ட்ஸ் அகாடமி மொத்தம் எட்டு மெடல்களை பெற்றுள்ளது

சூப்பர் சீனியர் பிரிவில் ஸ்வார்ட் மற்றும் ஸ்பியர் போட்டியில் ஃபைவ் எலமண்ட்ஸ் சிலம்பம் மற்றும் ஆர்ட்ஸ் அகாடமியின் அரவிந்த்ராஜ் முதல் பரிசையும், நெடுங்கொம்பு வீச்சு போட்டியில் 3வது பரிசையும் பெற்றுள்ளார். மேலும் இதே அணியை சேர்ந்த கோகுல் 2 மெடல்களையும், பிரபு, விஷ்ணு மற்றும் லோகேஷ் ஆகியோர் தலா ஒரு மெடலையும் பெற்றுள்ளதால் இந்த அணிக்கு மட்டும் மொத்தம் 8 மெடல்கள் கிடைத்துள்ளது.

மேலும் மூன்று மெடல்களை வென்ற ஃபைவ் எலமண்ட்ஸ் சிலம்பம் மற்றும் ஆர்ட்ஸ் அகாடமியின் அரவிந்த்ராஜ் ஏற்கனவே உலக சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் தற்போது அடுத்த உலக சாதனைக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மெடல்கள் பெற்ற அனைத்து வீரர்களுக்கு பயிற்சியாளர் பிரிட்டோ யுவராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply