சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சி, நாகை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மாவட்டகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் விடுமுறை அளித்த மாவட்டங்களில் மட்டும் தேர்வு தள்ளிவைப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும்  இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகளில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply