வெள்ளத்தில் மிதக்கும் சென்னை. எங்கே போனார்கள் தல-தளபதி ரசிகர்கள்?
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னலம் கருதாது பல தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உதவி புரிந்து வரும் நிலையில், தமிழக மக்களுக்கு பாடுபடுவதாக சொல்லிக்கொண்டு கட்சி ஆரம்பித்த லெட்டர் பேட் கட்சிகளின் சத்தமே காணவில்லை.
ஈழத்தில் உள்ள தமிழர்களுக்காக உயிரை கொடுத்து கூட்டம் போட்டு பேசிய பல தலைவர்கள் இந்த வெள்ளத்தில் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களை வெள்ளம் அடித்து கொண்டு போய்விட்டதா? அப்படி போயிருந்தால் அந்த வெள்ளத்திற்கு நன்றி கூட கூறலாம்.
சூப்பர் ஸ்டார் உள்பட ஒருசில நடிகர்கள் ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் என்று வெள்ள நிவாரணம் கொடுத்ததோடு சரி, ஆளையே காணவில்லை. சித்தார்த், ஆர்ஜே பாலாஜி, விஷால் போன்ற நடிகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி நடிகர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. தல, தளபதி, உலக நாயகன், சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஆக்கபூர்வமான உதவி தற்போது தேவைப்படுகிறது. களத்தில் இறங்குவார்களா? அல்லது தங்கள் தலைவனின் படம் வெளிவரும்போது பாலாபிஷேகம் செய்வது மட்டும்தான் இவர்களது வேலையா? என்பது போக போக தெரியும்
Leave a Reply
You must be logged in to post a comment.