சென்னை புத்தக சங்கமம் அமைப்பு வரும் 18ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு புத்தகக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை YMCA மைதானத்தில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறும்.
அனைத்து வயதினர்களுக்கு ஏற்ற புத்தகங்கள் இந்த புத்தக கண்காட்சியில் வைக்கப்படும் என்றும், புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணிவரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களுக்கு தனி செக்சன் அமைக்கப்படும் என புத்தக கண்காட்சி அமைப்பாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை புத்தக சங்கமம் என்ற அமைப்பில் இருந்து ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்ததாகவும், 100 பதிப்பகத்தினர்களுக்கும் மேல் இந்த கண்காட்சியில் தங்கள் பதிப்பக புத்தகங்களை வைத்திருந்தனர் என்றும், அதே போல் இந்த வருடமும் கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெறும் என்றும் நிர்வாகிகள் கூறினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.