shadow

srilanka cricket logo 200சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாட வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் அதிரடியாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ‘ஜூனியர் கிரிக்கெட்’ போட்டிகள் இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்க இலங்கை ஜுனியர் கிரிக்கெட் அணியில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தது.

சமீபத்தில் ஜெயலலிதா குறித்த அவதூறு செய்தி இலங்கை இணையதளத்தில் வெளியானதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், வீரர்களின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த குழுவினரை சென்னை காவல்துறையினர் இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் இந்த போட்டியில் இருந்து இலங்கை வீரர்கள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply