ஊரடங்கு உத்தரவின்போது இருசக்கர வாகனத்தில் சென்றால்? சென்னை கமிஷனர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை சமீபத்தில் பிரதமர் பிறப்பித்தார் என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் சற்று முன்னர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் அறிவித்து அதிரடியாக அறிவித்துள்ளார்

இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவின் போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply