தேர்தல் ஆணையம் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை அதிரடியாக நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜே.கே.திரிபாதியை நியமித்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நாமக்கல் எஸ்.பி மற்றும் மூன்று மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர்களை அதிரடியாக தேர்தல் ஆணையம் இன்று மாற்றியுள்ளது. சென்னையின் புதிய கமிஷனராக ஜே.கேதிர்பாதியும், நாமக்கல் புதிய எஸ்.பியாக சந்தோஷும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சேலம் கலெக்டர் மகரபூஷணம் என்பவருக்கு பதிலாக ஹரீஸ் சந்திராவும், வேலூர் கலெக்டர் நந்தகோபாலுக்கு பதிலாக ராஜேந்திர ரத்னு என்பவரும், ஈரோடு கலெக்டர் ஏ.கே.சண்முகத்திற்கு பதிலாக மதுமதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக பதவியேற்பார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.