கொரோனா அச்சம் எதிரொலி: சென்னையை காலி செய்யும் பொதுமக்கள்

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும், தமிழகத்திலும் மூன்று பேர்களை பாதித்துள்ளது. அந்த மூன்று பேர்களும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் ஒரு சிலர் பள்ளி கல்லூரி விடுமுறை மற்றும் அலுவலகங்கள் விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே பணம் பெறும் வாய்ப்பு இதனை பயன்படுத்திக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவை தவிர்க்க பயணங்கள் செய்ய வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தினாலும் சென்னையில் இருந்தால் கொரோனா தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply