சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டின் வாவ்ரிங்கா, பிரான்ஸ் நாட்டின் ரொஜர் வாஸ்லினை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
நேற்று மாலை நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் 7-5, 6-2 என்ற நேர்செட்டுக்களில் அபாரமாக விளையாடிய வாவ்ரிங்கா, சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு கிடைக்கும் ஐந்தாவது சாம்பியன் பட்டம் ஆகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.