shadow

சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்.

தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி டென்னிஸ் போட்டியான சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டி இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் உலகின் 6-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான சிலிச் (குரோஷியா), 14-ம் நிலை வீரர் ராபர்ட்டோ பவுடிஸ்டா (ஸ்பெயின்), அல்பர்ட்டோ ராமோஸ் (ஸ்பெயின்), மைக்கேல் யூஜனி ஆகியோர் உள்பட மொத்தம் 32 பேர் ஒற்றையர் பிரிவில் விளையாட உள்ளனர்.

மரின் சிலிச், பவுடிஸ்டா, ரமோஸ், கிளைஜான் ஆகிய நட்சத்திர வீரர்கள் பைஆர்டர் மூலம் 2-வது சுற்றில் நேரடியாக விளையாடுகிறார்கள். வைல்டு கார்டு மூலம் பிரதான சுற்றில் விளையாடும் தமிழகத்தின் ராம்குமார் முதல் சுற்றில் தகுதி நிலை வீரருடன் மோதுகிறார்.

மற்றொரு இந்திய வீரரான சருகத் மைனெனி தனது முதல் சுற்றில் முன்னாள் சாம்பியனான ரஷியாவின் மிகைல் யூஜனியுடன் மோதுகிறார். இப்போட்டி மைனெனிக்கு கடும் சவாலானது.

தகுதி சுற்றில் விளையாடி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரீ முதல் ஆட்டத்தில் இத்தாலி வீரர் மார்கோ செச்சினாட்டோவை வீழ்த்தினார். யுகிபாம்ப்ரி அடுத்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நிகோலஸ் கிச்சருடன் மோதுகிறார்.

இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி பரிசுத்தொகை ரூ.3 கோடியே 35 லட்சம் ஆகும்.

Leave a Reply