shadow

சென்னை ஓபன் டென்னிஸ்:  ராம்குமார் போராடி தோல்வியடைந்தார்
tennis
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் போராடி தோல்வியடைந்தார். மேலும் வாவ் ரிங்கா, பெனோயிட் பேர் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

தமிழக அரசின் ஆதரவுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வாவ்ரிங்கா, 27வது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் கார்ஸியா லோபஸை எதிர்கொண்டார். இந்த போட்டியில் வாவ்ரிங்கா 6-4, 6-4 என்ற நேர்ட் செட்டில் வெற்றி பெற்று அரை யிறுதிக்கு முன்னேறினார்.

இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரான்ன் நாட்டின் பெனோயிட் பேர், தரவரிசையில் 157வது இடத்தில் உள்ள இத்தாலியின் பேபியானோவுடன் மோதினார். இந்த போட்டியில் பெனோயிட் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் பேபியானோவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் காலிறுதியில் 45வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் அல்ஜாஸ் பெடனை சந்தித்தார். 248வது இடத்தில் உள்ள ராம்குமார் முதல் செட்டில் கடும் நெருக்கடி கொடுத்து 6-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் பெடன் பதிலடி கொடுத்தார். அவர் இந்த செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3வது  செட்டை பெடன் 6-3 என கைப்பற்றி 5-6, 6-4, 6-2 என வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தார்.

Leave a Reply