shadow

வேலைக்கு வராவிட்டால் வேலையை இழப்பீர்கள்: போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஊதிய உயர்வு கேட்டு நேற்று மாலை முதல் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது

“வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ஊதியம் திருப்திகரமாக இல்லையென்றால் வேறு வேலையை பார்க்கலாம் என்று போராட்டக்காரர்களுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர மறுத்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றூம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். எனவே இன்னும் சில நிமிடங்களில் ஊழியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply