shadow

sunசன் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு பண்பலை அலைவரிசை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்கசென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பிரதான வழக்கின் தீர்ப்புக்கு சன் குழுமம் கட்டுப்பட வேண்டும் என்றும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பண்பலை ஒளிபரப்பு ஏலத்தில் பங்கேற்க சன்குழுமத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சன்குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது

இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி சத்யநாராயணன், பண்பலை அலைவரிசை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்க சன்குழுமத்திற்கு இடைக்கால அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் சன் குழுமத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி தற்காலிகமாக நீங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply