shadow

heart copyசென்னையில் ஓர் நாள் திரைப்படத்தில் வருவது போன்று பரபரப்பாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மும்பை பெண் இன்று காலை கண் விழித்து பேசத்தொடங்கி விட்டதாக மருத்துவர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

 மும்பையை சேர்ந்தவர் கேப்டன் அஸ்பி பி மினோசேர்ஹோதி- அர்மைடி. தம்பதிகளின் 21 வயது மகள் அவோவி இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு மாற்று இதயத்துக்காக சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் மூளைச்சாவு அடைந்ததால் அவருடைய இதயத்தை எடுத்து அவோவிக்கு நேற்று முன் தினம் சென்னை மருத்துவர்கள் பொருத்தி சாதனை புரிந்தனர்.

இந்நிலையில் மாற்று இதயம் பொருத்தப்பட்ட அவோவி, இன்று அதிகாலை 1 மணிக்கு கண்விழித்து பேசினார். எனவே அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசமும் அகற்றப்பட்டது. தற்போது அவர் திரவ உணவு வகைகளை சாப்பிட்டு வருவதாகவும், கூடிய விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்விழித்ததும் தனக்கு இதயம் கொடுத்த லோகநாதனின் பெற்றோர்களுக்கு  அவோவி தனது நன்றியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply