shadow

தியேட்டர்களில் கூடுதல் கட்டணம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது, ‘தியேட்டர்களில் கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றூம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

ஜிஎஸ்டிக்கு பின்னர் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணமே அதிகமாக இருக்கும் நிலையில் அதைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது பார்வையாளர்களை தியேட்டர் பக்கமே வரவிடாமல் செய்வதற்குண்டான வழிவகையாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply