சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒரே ஒரு பெண் பயணி

சீனாவில் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து சென்னை திரும்ப முடிவு செய்தார். அவர் பயணம் செய்த விமானத்தில் அவர் மட்டுமே பயணம் செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது

இது குறித்து அவர் விமானத்திற்குள் இருக்கும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் பயணம் செய்த விமானத்தில் அவரை தவிர மற்ற இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தது. ஒரே ஒரு பயணிக்காக சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக அந்த விமானம் இந்தியாவுக்கு வந்துள்ளது

இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது ’சீனாவில் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனக்கு கொரோனா வைரஸ் குறித்த பயம் இருந்ததால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். ஒரே ஒரு பயணியாக இருந்தாலும் விமானத்தை ரத்து செய்யாமல் எனக்காக அந்த விமானத்தை இயக்கிய விமான நிறுவனத்திற்கு எனது நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply