shadow

ezhilagamபல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கிவரும் சென்னை சேப்பாக்கம் எழிலக கட்டடத்தின் முதல் மாடியில் திடீர்  தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயை, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மொத்தம் 4 மாடிகள் கொண்ட சேப்பாக்கத்தில் உள்ள எழிலக கட்டிடத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசுத்துறைகள் இயங்கி வருகிறது. இந்த அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கட்டடத்தின் முதல் மாடியில் வேளாண்மைத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தின்  உள் அறையில் மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த அறையில் இன்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

வேளாண்மைத்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply