shadow

ஜெயலலிதா மரணம் எதிரொலி: சென்னை கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மாற்றமா?

cricketஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்து 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிசம்பர் 16 அன்று சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி இந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் போர்டு, ‘சென்னை டெஸ்ட் போட்டி வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் மக்களின் உணர்விற்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

Leave a Reply