shadow

சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: நூலிழையில் இரட்டை சதத்தை தவறவிட்ட ராகுல்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 16ஆம் தேதியில் இருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாட தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் அடித்தது.

தொடக்க ஆட்டக்காரர் ராகுல் மிக அபாரமாக விளையாடி 199 ரன்கள் குவித்தார். இரட்டை சதத்தை அவர் நூலிழையில் தவறவிட்டது சென்னை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் பார்த்தீவ் பட்டேல் 71 ரன்களும், கே.கே.நாயர் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் உள்ளார். இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply