shadow

மழைவெள்ளத்தின் போது 18 பேர் பலி எதிரொலி. மியாட் மருத்துவமனையை இடிக்க கோரிய மனு நிராகரிப்பு
miot1
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டபோது மியாட் மருத்துவமனையில் 18 பேர் பலியானது குறித்த வழக்கில் அந்த மருத்துவமனையை இடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்துள்ளது.  

அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மியாட் மருத்துவமனை குறித்து மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அடையாறு ஆற்றை ஆக்கரமித்து உரிய அனுமதி இல்லாமல் மியாட் மருத்துவமனை கட்டப்பட்டதாகவும்,  ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாலேயே அங்கு மழை வெள்ளத்தின்போது உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் மியாட் மருத்துவமனையை இடிக்கவும், அதற்கு வழங்கப்பட்ட அத்தனை அனுமதிகளையும் ரத்து செய்யவும் டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  தமிழக சுகாதாரத்துறை செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், நந்தம்பாக்கம் காவல் நிலையம் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  மியாட் மருத்துவமனை முறையான அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதாகவும், வெள்ள நீர் மருத்துவமனையில் புகுந்ததில் 75 பேர் இறந்ததாக கூறுவது கற்பனையானது என்றும் கூறப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இன்னும் 6 வாரத்தில் விசாரணை நிறைவடையும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதை ஏற்றுக் கொன்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply