காவல்துறையினர்களின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் நேற்று இரவு காணாமல் போன தன்ராஜ் மற்றும் ரவி ஆகிய இருவரையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் உடலில் காயம் ஏற்பட்டிருந்ததால் இருவரும் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்த தன்ராஜ், வீடு, மனை விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரும் ரவியும் நேற்று முன் தினம் இரவு காலடிப்பேட்டையில் உள்ள ஓர் இடத்தில் சந்தித்து பேசியதாகவும், அதன்பின்னர் திடீரென காணாமல் போனதாகவும் கூறப்படுகின்றது. ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் இருவரும் கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.